↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad   கிராமத்து வேடம் கார்த்தி பயம்
கிராமத்து வேடத்தில் நடிக்க அச்சமாக இருந்தது என்றார் கார்த்தி.‘பருத்திவீரன்'  படத்தில் கிராமத்து வாலிபனாக அறிமுகமானார் கார்த்தி. அதன்பிறகு நகரத்து பின்னணியிலான படங்களில் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ‘கொம்பன்'  படத்தில் கிராமத்து வாலிபனாக நடிக்கிறார். இதன் ஆடியோ, டிரைலர் வெளியிடப்பட்டது. அதில் கார்த்தி பேசியதாவது: பருத்திவீரன் படத்துக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்தால் பருத்திவீரனையே திரும்பவும் செய்திருக்கிறார் என்று சொல்வார்கள் அல்லது வேறு கதாபாத்திரத்தில் நடித்தால் பருத்திவீரன் மாதிரி இல்லை என்பார்கள். இந்த பிரச்னையால்தான் பருத்திவீரனுக்கு பிறகு கிராமத்து கதை என்றால் நடிப்பதற்கு அச்சமாக இருந்தது. அப்படி ஒரு கதையே இப்போதைக்கு வேண்டாம் என்று இருந்தேன்.

ஆனால் இயக்குனர் முத்தையா, கொம்பன் கதையை சொன்னபோது பருத்திவீரன் கதாபாத்திரத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் வேறு சாயலில் இருந்தது. ஓ.கே என்று தோன்றியதால் நடிக்க முடிவு செய்தேன். ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் உதவி இயக்குனர்களிடம் சென்று இப்போது நடித்ததில் பருத்திவீரன் சாயல் இல்லையே என்று கேட்பேன். அவர்களும் இல்லை என்று சொல்வார்கள். அதை நம்பாமல் மறுபடியும் அதேகேள்வியை கேட்டு தொல்லை செய்வேன்.இவ்வாறு கார்த்தி பேசினார்.இயக்குனர் முத்தையா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ராஜ்கிரண், கருணாஸ், கிரீன், தயாரிப் பாளர் ஞானவேல்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top