↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'மாஸ்' படத்தின் இரண்டாவது லுக் சமீபத்தில் வெளியாகி சமூக இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு மிகவிரைவில் முடியவுள்ள நிலையில், அடுத்து படக்குழுவினர் பெங்களூரில் பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதற்காக அதன் உரிமையாளர் மதன், வெங்கட்பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் 'விண்ணைத்தாண்டி வருவாயா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கயல் போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top