↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எந்த ஒரு விவகாரமான விஷயத்தையும் ஜாடை மாடையாக சொல்வதில் சளைக்காதவர் நடிகர் பார்த்திபன்.

பெரும்பாலான விழா மேடைகள் இவர் இல்லாமல் களை கட்டுவதில்லை. ஆர்யா கூப்பிட்டால் அவரைக் கலாய்ப்பது, டைரக்டர் விஜய் கூப்பிட்டால் அந்த மேடையில் அவர் காதலை பகிரங்கப்படுத்துவது என பார்த்திபனின் குசும்புகள் ரசிக்க வைப்பவை.

தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் ஆரம்பித்திருக்கும் பாஃப்டா என்ற புதிய பிலிம் இன்ஸ்ட்டியூட் துவக்க விழாவில் மேடையேறினார் பார்த்திபன்.

விழாவில் பார்த்திபன் பேசியவை:

ஒரு பையன் தன் அக்காக்கிட்ட, அக்கா செக்ஸ்ன்னா என்னக்கான்னு கேட்டான். அவங்க கொஞ்சம் தடுமாறிட்டு, நீ அம்மாக்கிட்ட போய் கேளுன்னு சொன்னாங்க. உடனே கிச்சனுக்குப் போய், அம்மா செக்ஸ்ன்னா என்னம்மான்னு கேட்டான். ரொம்ப சாதாரணமா கத்தறிக்காய் நறுக்கிட்டு இருந்தவங்க, அவன் கேட்ட கேள்வியால கையவே வெட்டிக்கிட்டாங்க. அவங்களுக்கும் பயங்கர டென்ஷன், நீ போய் அப்பாக்கிட்ட கேளுன்னு சொன்னாங்க.

அப்பாக்கிட்ட கேட்டா, இந்தா குளிச்சிட்டு வந்துர்றேன்னு பாத்ரூம்குள்ள ஓடிப்போயிட்டார். உள்ள போயி அவரோட ப்ரெண்டுக்கு போன் பண்ணி என்னடா எம்பையன் செக்ஸ்ன்னா என்னான்னு கேட்கிறான். அவனுக்கு 5 வயசுதான் ஆகுது, எப்படி சொல்றதுன்னு கேட்கிறார்.

அதுக்கு அவர் டேய் இந்தக்காலத்து பசங்க அப்படித்தான் ஆயிட்டாங்க எதாவது சொல்லித்தொலைன்னு சொன்னார்.

அப்பா குளிச்சிட்டு வந்ததும் நானும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறம் கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு, அப்புறம் பெரியவங்க கால்ல எல்லாம் விழுந்து கும்பிட்டுட்டு, அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு சந்தோஷமான்னு சொல்லிக்கிட்டிருக்கும் போதே அந்தப்பையன், நீ சொல்றதெல்லாம் இந்த பேப்பர்ல எழுத முடியாதுன்னு சொல்றான்.

என்னன்னு பார்த்தா ஒரு அப்ளிகேஷன் பார்ம்ல செக்ஸுன்னு போட்டு, அதுக்கு நேரா male, female ன்னு ரெண்டு கட்டம் போட்டுருக்கு. இப்படித்தான் எங்க ஆரம்பிச்சு எங்க முடியும்னு தெரியாம இருக்கிறது தான், ஒரு திரைக்கதையோட த்ரில்லிங்னு நெனைக்கிறேன் என்றார் பார்த்திபன்.

அவரின் இந்தக்கதையை கேட்டு அரங்கமே சிரிக்க, அவருக்குப் பின் பேச வந்த மனோபாலாவோ இந்தக்கதையை பார்த்திபன் 100 தடவைக்கு மேல சொல்லிட்டார் என்றாராம் ஒரே போடாக.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top