↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாகிஸ்தானை புகழ்ந்தால் ஷூவால் அடித்து விரட்டுங்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய சாத்வி பாலிகா சரஸ்வதி மீது கர்நாடகாவின் மங்களூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ம‌த்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாத்வி பாலிகா, இந்து மத துறவியான இவர் கடந்த 1ம் திக‌தியன்று மங்களூருவில் நடைபெற்ற இந்து மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது பேசுகையில், நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வந்தே மாதரம் என்பதை கட்டாயமாக சொல்ல வேண்டும்.
இந்தியாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு கொண்டு பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களை ‘‘ஷூ''வால் அடித்து பாகிஸ்தானுக்கே விரட்ட வேண்டும் என்றும், அயோத்தியில் மட்டுமின்றி இஸ்லாமாபாத்திலும் ராமருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் எனவும் பேசினார்.
மேலும், அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மங்களூருவின் பந்தேஸ்வர் காவல்நிலையத்தில் சாத்வி பாலிகா சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top