ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கின் சிஞ்சார் (Sinchar) பகுதியில் வாழும் யாஸிதி என்னும் சிறுபான்மையினத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இதன்பின் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கூட்டம் கூட்டமாக இழுத்து செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த சில பெண்கள் தீவிரவாதிகளின் கொடுமையிலிருந்து தப்பிக்க கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்' துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து, மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இத்தகவலை உயிர் தப்பி வந்து'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' (Amnesty International) என்ற சர்வதேச அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.