‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் நடந்த மைசூர் அரண்மனை மற்றும் அணைப் பகுதியில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.
ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் மைசூர் மற்றும் லிங்கணமாக்கி அணை பகுதியிலும், அங்குள்ள அரண்மனையிலும் நடந்தது.
இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், சென்னையில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக மைசூரில் நடக்கிறது.
அங்கு சுதீப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. மைசூர், லலிதா மகால் அரண்மனையில் மகாராணியாக ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. 29-ம் தேதி முதல், விஜய் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. இதற்கு பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லிங்கா படம் நடந்த அதே இடத்தில், விஜய் படமும் நடக்கிறது. அதிலும் மன்னர் கதை, இதிலும் மன்னர் கதை. கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியை நெருங்கி வரும் விஜய்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.