↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி ஆடுகளம் மோசமானதாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆட்டத்திற்கு முன் இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட குயின்ஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
மோசமாக இருந்த இந்த பயிற்சி ஆடுகளத்தால் பந்து தாறுமாறாக எழும்பி வந்ததில் பயிற்சியில் ஈடுபட்ட தவானுக்கு வலது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரண ஊசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை பின் வரிசை வீரராகத்தான் களம் இறங்கினார். இதேபோல், விராட் கோஹ்லிக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது.
இன்றைய ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய அணி நிர்வாகம் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களாக புதிய வலைப்பயிற்சி மைதானத்தை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்ட போதும் அது வழங்கப்படவில்லை.
மேலும் இந்திய அணி வீரர்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top