↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இளையராஜா திமிர் பிடித்தவர்! சுந்தர்ராஜன் பேச்சால் பரபரப்பு - Cineulagam


தமிழ் சினிமாவில் 80களில் முன்னணியில் இருந்த இயக்குனர்களில் சுந்தர்ராஜனும் ஒருவர். பின் இவர் படம் இயக்குவதை சில நாட்கள் நிறுத்திவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் இளையராஜா பற்றி ஒரு மேடையில் அவர் மிகவும் திமிர் பிடித்தவர் என்று கூறினார். அந்த இடத்தில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது, பின் அதற்கான விளக்கத்தை மிக அழகாக அங்கு தெரிவித்தார்.
இதில் ‘ நான் இளையராஜாவிடம் 7 நல்ல டியூன்கள் இருப்பதை அறிந்து, அதில் சில பாடல்களை படத்திற்கு கேட்டேன், அதற்கு அவர் 7 பாடலையும் ஒரே படத்தில் பயன்படுத்தினால் தான் தருவேன் என்று கூறிவிட்டார்.
எனக்கு கோபம் வந்தது, என்ன இவர் இவ்வளவு திமிர் பிடித்தவரா இருக்கிறாரே என்று, அதன் பின் அந்த 7 பாடல்களையும் வைத்து நான் இயக்கிய படம் தான் வைதேகி காத்திருந்தாள்.
படம் வெளிவந்து வெற்றிபெற்ற பிறகு தான் தெரிந்தது, அவர் ஏன் அப்படி கூறினார் என்று அது தான் இளையராஜா’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top