↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏர் ஏசியா விமானத்தின் விமானியின் மகள் தன் தந்தையை வீட்டுக்கு வாருங்கள் என சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து 162 பயணிகளுடன் சிங்கப்பூரை நோக்கி நேற்று காலை புறப்பட்டு சென்றுள்ளது.
அப்போது ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தில் விமானம் கொண்டிருக்கையில், திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.
இதனையடுத்து சிங்கப்பூர், மலேசியா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
இதன்பின் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து மூழ்கியதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் விமானி இரியான்டோவின் (Iriyanto)மகள் ஏஞ்சலா (Angela)தன் தந்தையை குறித்து உருக்கமான செய்தி ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, அப்பா திரும்பி வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பா வாங்க நான் உங்களை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top