வேலாயுதம் படத்தையடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. மன்னர் காலத்திய கதையில் ஸ்ரீதேவியின் மகளாக, இளவரசியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.
இதுவரை நடித்த படங்களில் ஒருசில வரிகளில் மட்டும் வசனம் பேசி நடித்த ஹன்சிகாவுக்கு புலி இயக்குனர் சிம்புதேவன், அரைப்பக்கம் தமிழ் வசனங்களை கொடுத்து அதை மனப்பாடம் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டாராம். பரிட்சைக்கு பள்ளி மாணவிகள் படிப்பதுபோல, இரண்டு மணி நேரம் டென்ஷனோடு உட்கார்ந்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம்.
இந்த படத்தில் ஹன்சிகாவிற்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரீதேவி, டயலாக்கை எளிதில் எப்படி பேசுவது என்று புரியவைத்தாராம். அதன் பிறகு அந்த வசனத்தை முழு எக்ஸ்பிரஷனோடு பேசி நடித்தாராம். ஹன்சிகாவின் பெர்மான்ஸை பார்த்து இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டினார்களாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.