↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எத்தனை பெரிய ஸ்டார் நடிகரின் படமாக இருந்தாலும் கதைதான் முதுகெலும்பு. அது நன்றாக இருந்தால்தான் படங்கள் வெற்றி பெறும் என்று ரஜினியே சொன்ன பிறகு மற்ற நடிகர்களை கேட்க வேண்டுமா என்ன? தற்போது புலி படத்தின் இறுதிகட்டத்தை எட்டியுள்ள விஜய், இந்த படத்தை முடித்ததும் ராஜா ராணி அட்லி இயக்கும் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட விசயம்.

ஆனால், அதற்கடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னிடம் கதை சொல்வதற்கு அப்பாய்ண்மென்ட் கேட்டிருக்கும் டைரக்டர்களை ஒவ்வொருவராக அழைத்து கதை கேட்டு வருகிறார் விஜய்.

அப்படி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 5 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார்களாம். ஆனால், கதையை கேட்ட உடனேயே யாருக்குமே பதில் சொல்லும் பழக்கமில்லாத விஜய், வழக்கம்போல் நீங்க போங்க நான் அப்புறமா கூப்பிடுறேன் என்று தான் எப்போதும் சொல்லும் பதிலையே அனைவரிடமும் சொல்லியிருக்கிறாராம்.

மேலும், அப்படி தான் கேட்டிருக்கும் 5 கதைகளில் இருந்து ஒன்றைத்தான் அட்லி இயக்கும் படத்தை அடுத்து நடிக்கும் படத்துக்கு ஒகே சொல்லப்போகிறாராம் விஜய். அதனால் அந்த 5பேரில் யார் அதிர்ஷ்டசாலி என்பது அட்லி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் அறிவிக்க உள்ளார் விஜய்.

ஆக, கதை சொன்ன ஐந்து பேருமே அடுத்து தளபதி தங்களையே அழைக்க வேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top