↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்புவை வைத்து படம் எடுக்கிற எல்லாருமே கம்பி மேல் நடப்பது போல கலகலத்துப்போவது வாடிக்கைதான். வாலு படத் தயாரிப்பாளருக்கும் அதே நிலைமை வந்திருக்கும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடந்த பல்லாண்டுகளாக எல்லாரையும் பரிதவிக்க விட்ட சிம்பு, படத்தை முடித்துக் கொடுத்ததும் அல்லாமல், இன்னும் மிச்சமிருக்கிற ஒரு பாடல் காட்சியிலும் நடித்துக் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
இதற்கிடையில் இந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை என்று அவர் கொடுத்த பேட்டி ஒன்று, குக்கரில் வழியும் குழம்பாக கொதித்துக் கொண்டிருக்கிறது. கூடவே விழுந்து கொதித்துக் கொண்டிருக்கிறார் வாலு தயாரிப்பாளர். இதே தயாரிப்பாளரை ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுக்க தூண்டி, பல வாரங்கள் ஷுட்டிங் போன நிலையில் (நடுவில் இவர் கேன்சல் பண்ணிய நாட்களையும் சேர்த்தால் நஷ்டம் சில கோடிகளை எட்டும்) ‘அந்த படத்தை அப்படியே தூக்கி ஓரமா வைங்க’ என்று கூறிவிட்டார். அதற்கப்புறம் ‘விட்டு விட்டு’ வளர்ந்ததுதான் இந்த வாலு. பிறகு எப்படி சம்பளம் தனியாக வருமாம்?
இப்போது ‘வாலு’ படம் சென்சார் அனுமதிக்காக சென்றிருக்கிறது. அது வருவது ஒரு புறம் இருக்கட்டும். தனியாக ஒரு பாடலை சேர்த்து இணைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். குஷ்பு, சரோஜாதேவி போன்ற முன்னாள் ஹீரோயின்களுடன் சிம்பு ஆடப் போகிறாராம். எம்.ஜி.ஆர் கெட்டப்பில் அவர் ஆடுகிற வரிகளுக்கு சரோஜாதேவி ஜோடி. ரஜினி கெட்டப்பில் அவர் ஆடுகிற வரிகளுக்கு குஷ்பு ஜோடி. இன்னும் கமல், அஜீத் என்று போகுமாம் அந்த கெட்டப்புகள். வேறு வேறு மூத்த ஹீரோயின்களையும் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
‘சிம்புவுடன் சரோஜாதேவி ஆட்டம்’ னு தலைப்பு வச்சா கூட ரசிகர்கள் பொறுத்துப்பாங்க. ‘சிம்புவுக்கு எம்ஜிஆர் கெட்டப் ’னு தலைப்பு வச்சதான்தான் தப்பு! அதனால்…?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top