↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


மிக அதிக பொருட்செலவில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பாஹுபாலி. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவானி இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் 13 நிமிட வீடியோகாட்சி  ஒன்று இணையதளத்தில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுவிட்டதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்தன. 

இதுகுறித்து தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர்களுடைய விசாரணையின் முடிவில் தற்போது வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஹுபாலி படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் பணியில் விஷுவல் எபெக்ட் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வர்மாவிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. லீக்கான 13 நிமிட வீடியோவும் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top