↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி பொதுத் தேர்வில் மாநில அமைச்சர் ஒருவரின் மகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தேர்வு மையத்தில் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சந்த்கபீர் மாவட்டம் நாத்நகர் பிளாக் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாநில அமைச்சர் ஒருவரின் மகள் படித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உயர்நிலை பள்ளிகளுக்கான தேர்வு அங்குள்ள சுந்தர தேவி இண்டர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

அங்கே பொது தேர்வை எழுதிய அமைச்சரின் மகள், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் விடைத்தாளை பார்த்து அப்ப‌டியே காப்பியடித்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த பறக்கும் படையினர் அந்த மாணவியை கையும் களவுமாக பிடித்ததோடு, அவருக்கு உதவிய 2 மாணவர்களையும் பிடித்து அவர்கள் தேர்வெழுத தடை விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top