↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புதுச்சேரியில் இளம்பெண் ஒருவர், சனிப் பெயர்ச்சி சாதகமாக இல்லை என்று கூறியதால் தீக்குளித்து இறந்துள்ளார்.
புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதி நகரை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் சங்கீதா (23) மற்றும் கண்டமங்கலம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலை சங்கீதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சங்கீதா ஜோதிடம் பார்த்துள்ளார்.
அந்த ஜோதிடர், சனிப்பெயர்ச்சி சாதகமாக இல்லாததால் கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதை கேட்ட சங்கீதா மன வருத்தம் அடைந்ததோடு, கடந்த 20ம் திகதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதையடுத்து உடல் கருகிய நிலையில், அவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் சங்கீதா பரிதாபமாக இறந்துள்ளார்.
இதுகுறித்து கண்டமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top