↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலசந்தரின் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
 
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் அவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
 
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
 
பாலசந்தர் இயக்கிய ‘மரோ சரித்ரா’ தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. அவர் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தை பெரிதும் விரும்பினார். அவரது கனவு நகரம் பெரிய அளவில் புனரமைக்கப்படுவதை பார்க்காமலேயே அவர் காலமாகி விட்டது துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார்.



தெலுங்கானா முதல்மந்திரி கே.சந்திரசேகர ராவ் தனது இரங்கல் செய்தியில், தென்னிந்திய படங்களில் உயர்தரத்தை புகுத்திய டைரக்டர்களில் பாலசந்தர் முக்கியமானவர் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர பல்வேறு அரசியல் கட்சியினரும் பாலசந்தரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top