↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad முதல் முறையாக திகில் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்துக்கு Ôநைட் ஷோÕ என தலைப்பு வைத்திருந்தார்கள். ஆனால் இந்த தலைப்பு பி கிரேடு பட தலைப்பு போல இருப்பதாகவும் படத்தில் நயன்தாரா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்தன. இது நயன்தாராவை அப்செட் செய்ததாம். இந்த படத்தில் 'நெடுஞ்சாலை' படத்தில் நடித்த ஆரி ஹீரோ என்றாலும் முழு படமும் நயன்தாரா கேரக்டருக்கு முக்கியத்துவம் தந்தே எடுக்கப்படுகிறது. அவரது மார்க்கெட் வேல்யூவுக்காகவே இந்த படம் எடுக்கப்படுகிறது.

 அப்படி இருக்கும்போது அவரது இமேஜை பாதிக்கும் வகையில் இந்த தலைப்பு வைத்தால் பெண் ரசிகைகள் படம் பார்க்க வரமாட்டார்கள் என நயன்தாராவிடம் அவருக்கு நெருங்கியவர்கள் சுட்டிக்காட்டினார்களாம். இதையடுத்து படத்துக்கு தலைப்பு மாற்றும்படி நயன்தாரா டைரக்டருக்கு உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து உடனடியாக பெயரை மாற்றிவிட்டார் இயக்குனர். படத்தில் நயன்தாரா கேரக்டர் பெயர், மாயா. அதனால் அதே பெயரை வைத்திருக்கிறார்கள். ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தபோது அந்த கேரக்டருக்கும் மாயா என்ற பெயரே வைக்கப்பட்டது. அந்த படம் ஹிட்டானதால் அதே பெயரை இந்த படத்தில் பயன்படுத்தலாம் என நயன்தாராதான் டைரக்ட ருக்கு ஐடியா கொடுத்தாராம். இப்போது அதையே படத்துக்கு தலைப்பாகவும் சூட்டிவிட்டார்கள் என்கிறது படக்குழு.

 இமேஜை பாதிக்குது... பெயரை மாத்துங்க  டைரக்டரிடம் நயன்தாரா கடுப்பு

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top