↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத் ரசிகர்களுக்கு 2015ஆம் ஆண்டின் விடியல் மிகவும் உற்சாகமானதாக இருக்கும். அவர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்கள் வருகிற 31ஆம் தேதி  நள்ளிரவு – அதாவது, புத்தாண்டு பிறக்கும் நொடியில் – வெளியாகும் என  படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. டீசர்களில் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்று முதல் இடம் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் கானா பாலா பாடிய ‘அதாரு உதாரு’ என்ற பாடலை வெளியிட்டார்கள். இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். கானா பாலாவுடன், விஜய் பிரகாஷும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார். டீசரைப் போலவே இப்பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இசை, வருகிற 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருக்கிறார். அருண் விஜய் வில்லனாக வருகிறார்.

‘என்னை அறிந்தால்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top