↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அலெக்ஸ்பாண்டியன், சரோஜா,முரண் ஆகிய தமிழ் படங்களிலும், பல கன்னட படங்களிலும் நடித்த நடிகை நிகிதாவின் சமூக வலைத்தள பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட நிகிதாவின் நிர்வாண படத்தை மர்ம நபர் ஒருவர் பதிவு செய்துள்ளதால் நிகிதா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அந்த நபர் நிகிதாவிடம் ஆபாசமான சில கேள்விகளையும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கடும் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ள நிகிதா, 'நான் எனது ரசிகர்களிடம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக சமூகவலைத்தளத்தில் இருக்கின்றேன். ஆனால் சில தீய எண்ணம் கொண்ட விஷமிகள் மார்பிங் செய்யப்பட்ட என்னுடைய நிர்வாண படங்களையும், ஆபாசமான கேள்விகளையும் பதிவு செய்துள்ளனர். என்னை போன்ற பல பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. 

இதையே ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அந்த நபர் திருந்தாவிட்டால் அடுத்து சட்டபூர்வமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நிகிதாவின் ரசிகர்கள் பலரும் அந்த மர்ம நபருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து நிகிதா இதுவரை காவல்துறையிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top