சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிவரும் விஜய்58 படத்தின் இரண்டாம்கட்ட படபிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததை அடுத்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக நான்கு நாட்கள் இடைவெளிவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு முடிந்தவுடன் ஜனவரி 2ம் தேதி அடுத்தகட்ட படபிடிப்பிற்காக கேரளா செல்லவுள்ளது படக்குழு. இந்த படத்திற்கு மாரீசன், கருடா, போர்வாள் என மூன்று பெயர்களில் எதாவது ஒரு பெயரை டைட்டிலாக வைக்கபடும் என தகவல்கள் வெளிவாகிவந்தது.
ஆனால் சிம்புதேவனை நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது இந்த மூன்று டைட்டில்களுமே இல்லை, வேற ஒரு டைட்டில் யோசித்துள்ளோன் என்று கூறினார். அந்த டைட்டில் என்ன என்று ஆராய்ந்த போது ”புலி” என்ற தலைப்பு கதைக்கு கச்சிதமாக பொருந்துவதால் அதையே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த தலைப்பை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளார்.
இதைஅடுத்து அவரை சந்தித்து கேட்ட போது விஜய் படத்திற்கு என்பதால் தருகிறேன் என்று தலைப்பை விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது. எது எப்புடியோ சிங்கம், சிறுத்தை படங்களை விட இந்த புலி மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.