↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டெல்லியில் நடந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சக வீரர் கோஹ்லியும், அவரது காதலி அனுஷ்காவும் அன்றைய தினம் மும்பை கிளம்பியுள்ளனர். கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கடந்த 30ம் தேதியில் இருந்து டெல்லியில் இருந்தனர். அனுஷ்கா சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொள்ள தான் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் கோஹ்லியும், அனுஷ்காவும் டின்னர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது பலரும் அவர்களை பார்த்தனர். அனுஷ்கா டெல்லியில் உள்ள கோஹ்லியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் கேப்டன் டோணி, அவரது மனைவி சாக்ஷி, கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், மோஹித் சர்மா, இர்பான் பதான், ஷேவாக், இஷாந்த் சர்மா, ட்வெய்ன் பிராவோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோஹ்லியும், அனுஷ்காவும் திருமணத்திற்கு வரவில்லை. ஆனால் அதே நாளில் அவர்கள் இருவரும் விமானம் மூலம் மும்பை கிளம்பி சென்றுவிட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top