
இந்தியாவில் நடைபெற்றுவரும் 8வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
புனேயில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரகானே ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 33 ஓட்டங்களும், தீபக் ஹோடா 30 ஓட்டங்களும், ஜேம்ஸ் பால்க்னர் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் பஞ்சாப் சார்பில் அனுரீட் சிங் 3 விக்கெட்டும், மிட்செட் ஜான்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 163 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பந்துவீச்சில் பால்க்னர் 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சகலதுறை வீரராக அசத்தி வெற்றிக்கு வழி வகுத்த பால்க்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.