↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்துக்கு பிறகு Ôஅப்பா டக்கரு' உள்பட 4 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏற்கனவே ‘சமர்' படத்தில் திரு இயக்கத்தில் நடித்த திரிஷா மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி கால்ஷீட் தர முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு திட்டத்தில் குளறுபடி ஏற்பட நேர்ந்தது. இதையடுத்து படத்திலிருந்து விலகி கொண்டார் திரிஷா. அவருக்கு பதிலாக தற்போது டாப்ஸி நடிக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
‘காஞ்சனா 2‘, ‘வை ராஜா வை‘ படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருந்த டாப்ஸி அதன் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் புதிய தமிழ் படம் கைவசம் இல்லாமல் இருந்தார். இந்தியில் வாய்ப்பு தேடி சென்றவருக்கு அங்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. தற்போது தமிழில் 1 படம் மட்டுமே நடிக்கிறார். கோலிவுட் பக்கமே கடந்த 6 மாதத்துக்கும் மேலாக தலைகாட்டாமல் மும்பையில் டேராபோட்டிருந்தவர், தற்போது கோலிவுட்டுக்கு டேராவை மாற்றியிருப்பதுடன் பட வாய்ப்பை உயர்த்துவதற்காக சினிமா நபர்களின் பார்ட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.