↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொது இடங்களில் தென்பட்டால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டமே குவிந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் அவர் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் மாறுவேடத்தில் வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் மிக அரிதாக வெளியே வரும்போது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவரை அடையாளம் கண்ட. ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் ஆட்டோகிராப் வாங்க பலர் குவிந்தனர். அவர்களில் ஒருவர் மும்பையில் இருந்து சென்னையில் பயணம் செய்ய உள்ள தனது விமான டிக்கெட்டில் ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்.

ரஜினியை பார்த்தவுடன் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு வேறு எதுவும் இல்லாததால் அவர் விமான டிக்கெட்டில் ஆட்டோகிராப் வாங்கியதாக கூறப்படுகிறது. ரஜினியின் ஆட்டோகிராப் அடங்கிய அந்த விமான டிக்கெட்டை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.  அந்த டிக்கெட்டின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top