↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
 மணிரத்னம் படம் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு


மணிரத்னம் இயக்கி தயாரிக்கும் படம் ' ஓ காதல் கண்மணி' . துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். இப்படம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநியோகஸ்தர் ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய படம் ' கடல்' . கவுதம் கார்த்திக், துளசி நடித்திருந்தனர். இப்படத்தை விநியோகஸ்தர் மன்னன் வாங்கி வெளியிட்டார். இதில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. படம் வாங்குவதற்காக பெற்ற கடனுக்கு இன்னமும் வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மணிரத்னம் இழப்பீடு எதுவும் தரவில்லையாம். எனவே அவர் இயக்கியுள்ள  ' ஓ காதல் கண்மணி'  படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறி இருக்கிறார். இதுபற்றி தயாரிப்பாளர் சங்க தரப்பில் விசாரித்தபோது, எழுத்துபூர்வமாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை. ஆனால் கடல் படத்துக்காக நஷ்டஈடு பெற்றுத்தரும்படி விநியோகஸ்தர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top