↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



சினிமாவிற்கு வரும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படத்திலாவது போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். சமீபத்தில் இந்த கனவு சிவகார்த்திகேயனுக்கு நிறைவேறியதை அடுத்து தற்போது விஜய் சேதுபதியும் போலீஸ் வேடத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கவுள்ள இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பீட்சா என்ற வெற்றி படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ரம்யா நம்பீசன் மீண்டும் அவருடன் இணைய இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஹீரோவுக்கு நிகரான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

தற்போது புதுச்சேரியில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் இந்த படம் குறித்து கூறியபோது, 'சினிமாவில் வரும் வீரதீர சாகஸங்கள் செய்யும் போலீஸ் வேடத்தில் நடிக்கவில்லை. இந்த படத்தில் நான் நடிக்கும் போலீஸ் கேரக்டர் மிகவும் சாதாரணமாக இருக்கும். சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக, ஒரு போலீஸ்காரர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த படத்தின் கதை' என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி நடித்த 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை, இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் அவர் மெல்லிசை, நானும் ரவுடிதான், இறவி, போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top