↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad   ரஜினி மும்பை போனது ஏன்?
ரஜினியின அடுத்த படம் பற்றிய பேச்சு கோலிவுட்டில் பரவியுள்ளது. ‘லிங்காÕ பட பிரச்னை ரஜினியை மூட் அவுட் செய்திருந்தாலும் அதற்கு நஷ்டஈடு வழங்கி முற்றுப்புள்ளி வைத்த கையோடு புதிய படம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது முருகதாஸ், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘அகிராÕ என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இதையடுத்து ரஜினி படம் இயக்குவார் என்று கூறப்பட்டாலும் 2016ம் ஆண்டில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்க முருகதாஸ் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் ஷங்கர் இயக்கும் படம் அல்லது சுந்தர்.சி. இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கலாம் என கோலிவுட்டில் பேச்சு உள்ளது. ஆனால் சுந்தர்.சி. இதை மறுத்திருக்கிறார். ரஜினியிடம் இன்னும் கதை எதுவும் சொல்லவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ‘எந்திரன்' , ‘ஐ'  படத்தைபோல் மற்றொரு பிரமாண்ட படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். அடுத்து ரஜினி படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் ரஜினி திடீரென்று மும்பை புறப்பட்டு சென்றார். புதிய பட கதை விவாதத்திற்காக ஷங்கர், புதுபட படப்பிடிப்புக்காக முருகதாஸ் இருவரும் மும்பையில் உள்ளனர். அங்கு இருவரும் ரஜினியை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top