அஷ்லான்ஷா ஹொக்கிப் போட்டியில், உலகச் சாம்பியன் அவுஸ்திரேலிய அணியை 4- 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
இதில் நிக்கின் திம்மையா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோற்றதற்கு அவுஸ்திரேலிய அணியை இந்தியா பழிவாங்கிவிட்டது.
மலேசியாவின் இப்போ நகரில் நடந்து வரும் அஷ்லான்ஷா ஹொக்கிப் போட்டியில், இந்திய அணி, தென்கொரியாவுடன் நடந்த முதல் ஆட்டத்தில் சமன் கண்டது.
நியூசிலாந்து மற்றும் மலேசிய அணிகளிடம் தோல்வி கண்டது. கனடாவை 5- 3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது.
எனவே அஷ்லான் ஷா கிண்ணத்தை பொறுத்த வரை இந்திய அணியின் வெற்றி இனிமேல் எந்த பலனையும் தராது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.