↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் அப்படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்வதற்குள் நாக்கு தள்ளிப்போய்விட்டது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விஜய்யும், முருகதாஸும் தான். எப்படியோ படாதபாடுபட்டு படத்தை திரைக்கு கொண்டுவந்தது லைக்கா.
இனி தமிழ் சினிமாவில் எந்த படத்தையும் தயாரிக்கமட்டார்கள் என எதிர்ப்பார்த்த பலருக்கு இன்று வெளிவந்திருக்கும் செய்தி சற்று அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது. நீண்ட நாட்களாகவே இயக்குநர் ஷங்கர் எந்திரன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், ஆனால் எந்திரன் திரைப்படத்தை இந்தியில் தான் ஷங்கர் இயக்குவார் எனவும் செய்திகள் பரவின. தற்போது தமிழில் எந்திரன் 2ம் பாகத்தை ரஜினியை வைத்தே இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர். இப்படத்தைதான் தயாரிக்கப்போகிறது லைக்கா நிறுவனம். இன்னொரு பக்கம் லைக்கா நிறுவனம் இந்தியில்தான் எந்திரன் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் ரஜினி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணத்திலும் பலர் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
படத்தை தயாரித்துவிட்டு அதை வெளியிடும்போது எந்தெந்த தியேட்டருக்கு பெட்ரோல் குண்டுவீச்சு இருக்கோ. அய்ய்யய்ய்யோ…!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top