↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அரசியலில் ஓங்கி குரல் கொடுக்கிற யாருடன் சேர்ந்தாலும், பிரச்சனை நமக்குதான் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.
முதலில் ஓ.கே சொன்ன ஜீவா இப்போது பலத்த வேகத்துடன் பின்னோக்கி ஓடுவதால் அதிர்ச்சியாகியிருக்கிறது தமிழருக்காக குரல் கொடுக்கும் இயக்குனர் வட்டாரம். கத்தி பிரச்சனையின் போது சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே தலைவர் இவர்தான் என்பதால் அந்த நிறுவனத்திற்கும் இவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர். அப்போதே ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி தாருங்கள் என்றார்களாம். இவரும் சரி என்று கூறியிருந்தார். இப்போது ஜீவாவிடம் கேட்டால், ‘நான் முன்ன சொன்னது உண்மைதான். ஆனால் இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு என்னால முடியாது. ப்ளீஸ் விட்ருங்க’ என்கிறாராம். ‘அந்த தம்பியை என்னவோன்னு நினைச்சோம். இப்படி கடைசி நேரத்தில் கழுத்தறுப்போர் சங்க தலைவராக இருக்கிறாரே’ என்று கவலை கொண்ட இயக்குனர் வட்டாரம், முன்னணி நடிகர்களிலேயே முரட்டு சிந்தனை கொண்ட வேறு யாராவது இருந்தால் பார்க்கலாம் என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top