↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக்குட்டியுடன் மைதானத்தில் போட்டியை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களைகட்டும்.
இந்நிலையில் கடந்த 3ம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், காலரியில் நின்று கொண்டிருந்த சாத் அல்தீன் அல்-ஜமால் என்ற ரசிகரை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதற்கு காரணம் அல்-ஜமால் தனது கையில் சிங்கக்குட்டியை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தார். மேலும் அந்த சிங்கக்குட்டிக்கு தனது விருப்பமான கால்பந்தாட்ட அணியின் ஜெர்ஸியை அணிவித்திருந்தார்.
கால்பந்தாட்ட ரசிகரான அல்-ஜமால் தனது வீட்டில், அலெக்ஸ் மற்றும் மோனா என்ற இரண்டு சிங்கக்குட்டிகளை வளர்த்து வருகிறார்.
தெற்கு காசாவில் உள்ள ரபா என்ற நகரில் வசித்துவரும் அல்-ஜமால், அங்கிருக்கும் வனவிலங்கு பூங்காவிலிருந்து இந்த இரு சிங்கக்குட்டிகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இது பற்றிய செய்திகள் வலைத்தளங்களில் பரவ, அல்-ஜமாலுக்கு பாராட்டுகளும், குற்றச்சாட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top