↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லிக்கு, நட்சத்திர வீரர் சச்சின்  டெண்டுல்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எட்டாவது ஐ.பி.எல். சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி சந்திக்கிறது.
இந்த போட்டிக்காக மும்பை அணி ஈடன்கார்டன் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டன.
மும்பையின் புதிய பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் கண்காணிப்பில் இலங்கை வீரர் லசித் மலிங்கா, ஆரோன் பின்ஞ் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித், சச்சினுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
இந்தப் போட்டியில் எப்படி செயல்பட வேண்டும்? அதில் சாதிக்க எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்து சச்சின் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்தாக ரோஹித் சர்மா கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணியுடன் பெங்களூர் அணி விளையாட இருக்கிறது. இதற்காக அந்த அணியும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பயிற்சியில் இருந்த கோஹ்லியுடனும் சச்சின் உரையாடினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top