↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘ஷோலே’ கப்பார் சிங் வேடத்தி்ல் நடிக்க ஆசைப்படும் விக்ரம்..!
விக்ரம், எமி ஜாக்சன் ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
இதன் பட வேலைகள் 2012-லேயே துவங்கின. படத்தின் பெரும் பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்து வெளியிட்டனர். 
இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். உடற்பயிற்சியாளர் கேரக்டரில் அவர் வருகிறார். மனிதனும், மிருகமும் கலந்த இன்னொரு கெட்டப்பிலும் தோன்றுகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ‘டப்பிங்’ மற்றும் ரீரிக்கார்டிங் பணிகள் துவங்கின. செப்டம்பர் மாத இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. எனவே படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது பொங்கலுக்கு ‘ஐ’ படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய திரையுலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐ’ படத்தின் டிரைலரும் சமீபத்தில்  வெளியானது. இரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டிரைலர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
ஹாலிவுட் படமான ‘தி ஹாப்பிட்’டுடன் இணைத்தும் இந்த டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர். ஹாலிவுட் படத்துடன் வரும் முதல் தமிழ் பட டிரெய்லர் இதுவாகும்.
இந்நிலையில் ‘ஐ’ படம் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ‘யு/ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதாக சென்சார் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ‘யு/ஏ’ சர்டிபிகேட்  படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படக் குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. 
ரிவைசிங் கமிட்டிக்கு ‘ஐ’ படம் செல்வதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 
தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ’ஐ’ படம் வருகிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு நேரில் சென்று அந்தந்த மொழி பாடல் சி.டிக்களை வெளியீட்டு உள்ளனர்.
மும்பையில் நடந்த விழாவில் விக்ரம் பேசும்போது, “என்னுடைய சினிமா வாழ்க்கையில் ’ஐ’ எனக்கு முக்கியமான படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை. இதில் மூன்று வித்தியாசமான கேரடக்டரில் வருகிறேன். ஒவ்வொரு கேரக்டரும் வெவ்வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தோற்றம், பேச்சு எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.
சினிமாவில் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. நாடகங்களில் நடித்துக் கொண்டேதான் வளர்ந்தேன். வகுப்பில் இருந்ததைவிட மேடை நாடகங்களில் பங்கேற்றதுதான் அதிகம்.
நாடகத்தில் நடித்தபோது ஆசிரியர்கள் எனக்கு ஜுலியஸ் சீசர் வேடம் அளித்தனர்.  ’எனக்கு அது பிடிக்கவில்லை. புரூட்டஸ் வேடத்தில் நடிக்கிறேன்…’ என்றேன். அந்த கேரக்டர்தான் வித்தியாசமாக இருந்தது. அது போல்தான் சினிமாவிலும் எதிர்ப்பார்க்கிறேன்.
எப்போதும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இந்தியில் ‘ஷோலே’ படத்தில் வரும் ‘கப்பார் சிங்’ கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன்..” என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top