↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மதுபோதையில் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றவழக்கில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல்கிப்ஸ் கைது செய்யப்பட்டார்.

சொந்த ஊரான கேப்டவுனில் மதுபோதையில், காரைவேகமாக ஓட்டிச் சென்ற கிப்ஸ், மற்றொரு காரின் மீதுமோதியுள்ளார். இதையடுத்து கிப்ஸை கைது செய்தகாவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும்,ஓராண்டுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது செயல்குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே 2009-ஆண்டு இதே குற்றத்திற்காக அவர்கைது செய்யப்பட்டார். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி100 மணி நேரம் சமூகப் பணியில் ஈடுபட்டதை அடுத்து கிப்ஸ் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top