↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சினிமாவிற்கு வந்த புதிதில் நிறைய கஷ்டங்களை பார்த்துவிட்டதாக நடிகை அசின் கூறியுள்ளார். தமிழில் நம்பர்-1 நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினியால் பாலிவுட்டுக்கு போனார். முதல்படமே ஹிட்டாக தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த அசின், கடைசியாக தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாத அசின், இப்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஐதரபாத்திற்கு வந்த அசின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்தேன். ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு வந்தபோது நிறைய கஷ்டங்களை பார்த்து விட்டேன். அப்போது யாரும் எனக்கு உதவவில்லை. என்னுடைய சொந்த முயற்சியால், தனியாக போராடி தான் முன்னுக்கு வந்திருக்கேன். இனிமேலும் அப்படித்தான். சினிமாவில் நிலைக்க திறமை தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.