↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நீண்ட நாளாகவே இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சூர்யா, வெங்கட் பிரபு ஆலோசித்து வந்தனர். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்‘ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். நயன்தாரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென்று எமிக்கும், நயனுக்கும் லடாய் ஏற்பட்டது. எமி நடிப்பதை நயன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து எமியின் காட்சிகளை வெங்கட் பிரபு குறைத்தார். இதுபிடிக்காத எமி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரணிதா ஒப்பந்தம் ஆனார். இவர் சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர்.

சூர்யா&பிரணிதா நடிக்கும் முக்கிய காட்சிகளை பல்கேரியாவில் படமாக்க முடிவு செய்து பட குழு புறப்பட்டது. ஆனால் மழை குறுக்கிட்டு ஷூட்டிங் நடக்க விடாமல் தடுத்தது. காத்தி ருந்து பார்த்த குழுவினர் இந்தியா திரும்பினார். இந்த வாரம் மீண்டும் பட குழு பல்கேரியா சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பேரழகன், வேல், மாற்றான், 7ஆம் அறிவு, அஞ்சான் படங்களில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top