↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஏ படம் இயக்குபவர் என்று டைரக்டர் சாமிக்கு ஏற்கனவே ஒரு முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து திருந்திவிட்டதாக கூறியவர் ‘கங்காரு‘ என்ற படத்தை இயக்கி சென்சாரில் யு சான்றிதழும் வாங்கிவிட்டார். வேலை டென்ஷன், பிசினஸ் டீலிங் என்று பரபரப்பாக இருந்தவர் சமீபத்தில் வளசரவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றாராம். அங்கு குறிப்பிட்ட பெயரை சொல்லி சரக்கு கேட்டார். அதை தந்த கடைக்காரர் கூடுதல் விலை சொன்னாராம், வாட்டர் பாட்டில், ஆம்லெட் என எல்லாவற்றுக்குமே எக்ஸ்ட்ரா விலை சொன்னாராம் கடைக்காரர். 

இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருதரப்பிலும் தகராறு முற்றியது. கோபம் அடைந்த கடைக்காரர் குண்டர்கள் சிலரை அழைத்து சாமியை இந்த இடத்திலிருந்து விரட்டுங்கள் என்றாராம். அவர்களும் அவரை அங்கிருந்து கிளம்பும்படி கூற சலசலப்பு அதிகரித்தது. கோபம் அடைந்த சாமி, உங்களை பற்றி போலீசில் புகார் கொடுக்காமல் விடமாட்டேன்' என சொல்லிவிட்டு கோபமாக இடத்தைவிட்டு நகர்ந்தாராம். டாஸ்மாக் கடையில் சாமி கலாட்டா செய்த விஷயத்தை பற்றித்தான் கோடம்பாக்கத்தில் இப்போது பேச்சாக இருக்கிறது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top