
நேற்று ஒட்டு மொத்த சினிமாவே கொண்டாட்டத்தில் இருந்தது என்றால் அது ரஜினி என்ற ஒரே மனிதருக்காக தான். வழக்கமாக அவர் பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் கொண்டாடி வருவர். அதிலும் நேற்று அவருடைய லிங்கா படம் வேறு ரிலீஸ். எனவே இரட்டிப்பு சந்தோஷத்தை பல வகையில் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அதோடு நேற்று பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் வகையில் ரஜினி ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர் நரேந்திர மோடி, கலைஞர், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு நன்றி கூறியதோடு ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.