ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் ஈராக்கை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாள நபர் ஒருவரை சுற்றி வளைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இஸ்லாமிய சட்டத்தின் படி ஓரினச்சேர்க்கை உறவில் இருப்பது தவறு என கூறி கல்லடி கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
இதனையடுத்து பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றிற்கு அந்நபரை அழைத்து சென்ற தீவிரவாதிகள், அங்கிருந்து அவரை தூக்கி வீசியுள்ளனர்.
இதன்பின் கீழே வந்து அந்நபரை சூழ்ந்த தீவிரவாதிகள் கல்லால் அடிக்க, துடிதுடித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேபோல் இரண்டு ஓரினச்சேர்க்கையாள நபர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கொடூரமாய் கொன்றது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.