↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இரண்டாம் உலகம் படத்துக்கு பிறகு கோலிவுட் படத்தை இயக்காமல் ஒதுங்கி இருக்கிறார் செல்வராகவன். ‘இது மாலை நேரத்து மயக்கம்‘ படத்தை தனுஷை வைத்து இயக்குவதாக இருந்தார். ஆனால் கோலிவுட்டில் அவர் படம் இயக்கினால் அதை வெளியிடுவதில் சிக்கில் இருப்பதால் அப்படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். அடுத்த 1 வருடத்துக்கு படம் இயக்காமல் குழந்தை, மனைவியுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டிருந்தார். 

இதற்கிடையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, ‘மாலை நேரத்து மயக்கம்' படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுபோல் தனக்கும் ஒரு இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கிறார் செல்வராகவன்.தமிழில் இயக்கிய ‘காதல் கொண்டேன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார் செல்வா. 

ஒரிஜினல் கதையில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் 'க்கு பதில் பாலிவுட் ஹீரோ ஒருவரை ஒப்பந்தம் செய்ய எண்ணி உள்ளார். இதபற்றி செல்வராகவன் தரப்பில் கேட்டபோது,‘கா.கொ. படத்தில் தமிழில் நடித்த ஹீரோவையோ அல்லது வேறு நடிகர், நடிகைகளையோ இந்திக்கு பயன்படுத்தாமல் புதிதாக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க எண்ணி இருக்கிறார். 'டன் இந்தியில் வேறு படத்தில் பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்' என பதில் வருகிறது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top