↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad 2014ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை பெறப் போவது யார் என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) சார்பில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கால்பந்து வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் ரொனால்டோ(போர்ச்சுக்கல்), மெஸ்சி(அர்ஜென்டினா), நூயர்(ஜேர்மனி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் வெளியான 23 வீரர்கள் அடங்கிய உத்தேசப் பட்டியலில் இருந்து, இந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு விருது கிடைக்கப் பெற்றால் ரொனால்டோ மூன்றாவது முறையாகவும், மெஸ்சி ஐந்தாவது முறையாகவும், நூயர் முதன்முறையாகவும் பெறுவர்.
மேலும் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனை விருதுக்கான உத்தேசப் பட்டியலில் ஜெர்மனியின் நடினா, பிரேசிலின் மார்ட்டா, அமெரிக்காவின் அபே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் சிறந்தவர்களை தேசிய கால்பந்து அணியின் அணித்தலைவர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வார்கள்.
விருதுக்குத் தெரிவான நபர்களின் விபரங்கள் வருகிற ஜனவரி 12ம் திகதி ஜூரிச்சில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top