ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜோதிடர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பன்னல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அரசாங்கம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் அல்ல என்று கூறியுள்ள மைத்திரிபால சிறிசேன, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்குச் சென்று திரும்பும் போது, அந்த தெய்வத்தை வணங்கும் பக்தர்கள் இருவர் எங்கள் வசம் வந்துவிட்டனர்” என்றுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.