↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ராணாவுடன் பிரேக் அப் ஆனதிலிருந்து தனது காதல் பாதையை தயாரிப்பாளர் வருண் மணியன் பக்கம் திருப்பினார் திரிஷா. திருமணம் பற்றி கேட்டபோது, ‘திருமணம் நல்ல விஷயம். அதை அறிவித்துவிட்டுத்தான் செய்வேன்' என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். 

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்றார் திரிஷா. அவருடன் காதலன் வருண் மணியனும் செல்கிறார் என்று கூடவே கிசுகிசுவும் பரவியது. இதை பகிரங்கமாகவே திரிஷா மறுத்தார். ‘ஏன் தான் இப்படி எழுதுகிறார்களோ?' என கடிந்துகொண்டார். 

பூனைக்குட்டி வெளியே வந்ததுபோல் தற்போது குட்டு உடைந்திருக்கிறது. டெல்லி சென்ற திரிஷாவுடன் காதலன் வருண் மணியனும் சென்றிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதை டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவே போட்டோவாக வெளியிட்டிருக்கிறார். 

அதுவும் காதல் சின்னமான தாஜ் மகாலை சுற்றிப்பார்க்கஇரண்டுபேரும் சென்றிருக்கின்றனர். கூடவே திரிஷாவின்  தோழிகளும் ஜதைபோட்டு சென்றிருக்கின்றனர். இது பற்றி திரிஷா அம்மா உமாவிடம் கேட்டபோது, ‘திரிஷா தாஜ்மகால் பார்க்க சென்றிருப்பது உண்மைதான். 

அவருடன் வருண் மணியன் மற்றும் திரிஷாவின் தோழிகளும் சென்றிருக்கின்றனர். எனக்கு நிறைய வேலை இருப்பதால் செல்ல முடியவில்லை. திரிஷாவின் திருமணம்பற்றி கேட்கிறார்கள். இந்த வருடம் திருமணம் நடக்குமா என்கிறார்கள். இந்த வருடத்தில் அவகாசம் இல்லை. ஆண்டவன் அருளுடன் அடுத்த வருடம் திரிஷாவின் திருமணம் நடக்கும். இதுபற்றி நல்ல சேதியை சீக்கிரமே சொல்கிறேன்' என்றார்.

 வருண் மணியனுடன் நடந்த ந¤ச்சயதார்த்த ரகசியம் கசிந்ததால் 2 படங்களிலிருந்து திரிஷா நீக்கப்பட்டார். இனி வாய்ப்புகள் வராது என தெரிந்தபிறகே டெல்லியில் வருணுடன் இருக்கும் படங்களை ( காதலனுடன்  த்ரிஷா) கோபத்தில் அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top