↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐ.எஸ். அமைப்பினர் மதம் மாற மறுத்த 4 கிறிஸ்துவ குழந்தைகளின் தலைகளை கொய்ததாக பாக்தாதில் பணியாற்றும் பிரித்தானிய பாதிரியார் தெரிவித்துள்ளார்.
பாக்தாதில் பணியாற்றும் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், பாக்தாத் அருகே இயங்கும் ஆர்தோடாக்ஸ் கிறிஸ்துவ கூட்டமைப்பு வளாகத்தை ஐ.எஸ். அமைப்பினர் தங்களது கைவசம் கொண்டு வந்துவிட்டனர்.
மேலும், அவர்கள் சிலரிடம் மதம் மாற கூறுகின்றனர், அதனை மறுப்பவர்களின் குழந்தைகளின் தலையை கொய்கின்றனர்.
எனக்கு தெரிந்த 15 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகளை இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்ற அவர்கள் வலியுறுத்தினர். அதனை மறுத்ததால் அவர்களது தலை கொய்யப்பட்டது.
மேலும், இங்கிருக்கும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எங்களது நண்பர்கள் என்றும் இஸ்லாமியர்களுக்கு இதே நிலை தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top