↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் ஒரே நேரத்தில் ஐ படத்தை வெளியிட இருக்கிறார் ஆஸ்கார் ரவி. அதனால் ஐ படத்திற்காக தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்கள் முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன என்ற வதந்திகளும் வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் ஐ படத்தை ரிலீஸ் செய்ய படைத்தரப்பு விரும்புகிறது.


ஐ படத்தின் தயாரிப்பாளர் ஜனவரி 5 ஆம் தேதியை நினைத்து கலக்கத்தில் இருக்கிறார். அன்றைய தினம்தான் சென்சாருக்குச் செல்கிறது ஐ படம். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், விக்ரமின் அகோரமான முகம் ஆகியவற்றின் காரணமாக படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதை எல்லாம் தாண்டி இப்படத்துக்கு யு சர்டிஃபிகேட் வாங்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார் தயாரிப்பாளர். ஐ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஆளும்கட்சி சேனலுக்கு விற்கப்பட்டிருப்பதால் சென்சாரில் பிரச்சனை இருக்காது என்று ஐ படக்குழு தெம்புடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top