↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிட்னி தாக்குதலில் பலியானவர்களின் சாமாதியில் பெண் ஒருவர் திருமண உடையுடன் வந்த அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த வாரம் மோனிஸ் என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில், மூவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் உலகெங்கும் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த மனால் கசீம் (Manal Kassem Age-23) என்ற இஸ்லாமிய பெண், மாரிடின் அரண்மனையில் (Martinpalace) புதைக்கப்பட்ட தாக்குதலில் பலியானோரின் சாமாதிக்கு தன் கணவருடன் மணக்கோலத்தில் வந்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்திய அவர், கண்ணீர் சிந்தி கதறியதை பலரும் பார்த்துள்ளனர்.
மேலும் இப்பெண் தனது திருமண நிகழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் புறக்கணித்து விட்டு அஞ்சலி செலுத்த சென்றதாக கூறப்படுகிறது.
இக்காட்சியை பார்த்த அனைவரும் பெண்ணின் செயலுக்கு பாராட்டி கரகோஷம் எழுப்பியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top