↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பையை யார் வழங்குவது என்ற போட்டியில் ஐசிசி சேர்மன் சீனிவாசனிடம் தோற்ற, ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஸ்டேடியத்தை விட்டே வெளியேறிய நிலையில், ஐசிசி பற்றிய திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்துவேன் என்று முஸ்தபா கூறியுள்ளார். 1996 உலக கோப்பைவரை, வெற்றி பெற்ற அணிகளுக்கு யாராவது ஒரு விஐபிதான் கோப்பையை அளித்து வந்தார். ஆனால் அதன்பிறகு ஐசிசி தலைவர் கோப்பையை வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஐசிசியில் தற்போது சேர்மன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரமிக்கவரான சீனிவாசன் அமரச் செய்யப்பட்டுள்ளார். இந்த சேர்மன் பதவில் உள்ளவர்களுக்குதான், ஐசிசியில் அதிக அதிகாரம் உண்டு. காலிறுதி போட்டியில், இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவுக்கு வங்கதேச பவுலர் ருபேல் வீசிய பந்து நோபால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே பந்தில் அவர் கேட்ச்சும் கொடுத்தார். எனவே இந்தியாவின் நெருக்கடியால் நடுவர் அப்படி அறிவித்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஐசிசி தலைவர் கமால். இவர் வங்கதேசத்தின் அமைச்சராகவும் உல்ளதால், இப்பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பேட்டிகள் கொடுத்தார்.
இதனால் அதிருப்தியடைந்த சீனிவாசன், உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தனது கையால் கோப்பையை வழங்கினார். சீனிவாசன்தான் கோப்பையை வழங்க வேண்டும் என்று ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முஸ்தபா கமால் பரிசளிப்பு விழாவை புறக்கணித்து கிளம்பிவிட்டார்.
இந்நிலையில் முஸ்தபா, வங்கதேச செய்தி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், "உலக கோப்பையை ஐசிசி தலைவர்தான் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அதைமீறி நான் புறக்கணிக்கப்பட்டேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனது உரிமைகளுக்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. ஐசிசியில் நடைபெறும் நிகழ்வுகளை இந்த உலகம் அறிய செய்வேன். ஐசிசி கோல்மால்களுக்கு யார் காரணம் என்பதையும் தெரியப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» ஐசிசி விவகாரங்களை அம்பலப்படுத்துவேன்.. "கப்" கொடுக்க முடியாத கடுப்பில் பேசும் கமால்!!
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.