↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
rajini, karunakaran
நகைச்சுவை நடிகராக் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் கருணாகரன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா? என்று கேட்டதற்கு கருணாகரன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top