கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு யூ டியூபில் வெளியாகிய ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இதுவரையில் 2.5 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களையும் அறுபது ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது. ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் டீசர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இதனால் பலத்த போட்டிகளுக்கிடையே இதன் இசை உரிமையை கைப்பற்றியிருக்கும் சோனி நிறுவனம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இதுகுறித்து தென்னக சோனி நிறுவனத்தின் தலைவர் அசோக் பர்வானி கூறியதாவது: “என்னை அறிந்தால் டீசர் பெற்றிருக்கும் இமாலய வரவேற்பினால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். வழக்கம்போல் இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் மிக சிறப்பாக இசையமைத்துள்ளார். கூடிய விரைவில் இதன் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன்பின் பாடல்கள் இந்திய அளவில் பேசப்படும்” என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.