↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் ஒருசில இணையதளங்களில் அஜீத் இந்த படத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களிடம் இருந்து பெற்றதாக வதந்தி பரவி வருகின்றது. முதலில் ஒருசில இணையதளங்களில் பரவிய இந்த வதந்தி தற்போது சமூக வலைத்தளங்களிலும் பற்றிக்கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜீத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் வதந்தி. ஊடகம் இருக்கின்றது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கற்பனையாக எழுதக்கூடாது. அஜீத்தின் மார்க்கெட்டுக்கு நியாயமாக என்ன சம்பளம் கொடுக்க வேண்டுமோ அந்த சம்பளம்தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் அதை முழு திருப்தியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அஜீத்துடன் அனுஷ்கா,த்ரிஷா, அருண்விஜய், நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்தூள்ளார். இம்மாத இறுதியில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசை வெளியீடு விழா நடைபெறும் என்றும், பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top